கோடம்பாக்கம் பப்பாளி இஷாரா

பப்பாளி, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா. அந்த படங்களுக்கு பிறகு சில படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளார். ஆனால்
இன்னும் கமிட்டாகவில்லை. இதற்கிடையே தெலுங்கு படங்களில நடிக்க படவேட்டையில் இறங்கிய இஷாராவுக்கு அங்குள்ள டைரக்டர்கள் சொன்ன வார்த்தை பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டதாம்.

அதாவது, அவரது உடல்கட்டை மேலும் கீழும் பார்த்த டைரக்டர்கள், இந்த உடம்புக்கு கதாநாயகி வேடமெல்லாம் தர முடியாது. ஆன்ட்டி வேடம்தான் தர முடியும் என்று நேரடியாகவே கூறி விட்டார்களாம். இதனால் இனிமேல் தெலுங்கு பக்கம் சென்றால் அவர்கள் சொன்னது ஒருவேளை நடந்தாலும நடந்து விடும் என்று போன வேகத்திலேயே கோடம்பாக்கத்துக்கு ரிட்டனாகிவிட்டார் இஷாரா.

இதையடுத்து, சென்னையில் வந்து ஹோட்டலில் தங்கியிருந்து தனக்கு சான்ஸ் தருவதாக சொன்ன கம்பெனிகளுக்கு விசிட் அடித்து வரும் இஷாரா, இனி கோடம்பாக்கத்திலேயே தங்கி விடவும் முடிவெடுத்துள்ளார். அதனால் சில ஹவுஸ் புரோக்கர்களை தொடர்பு கொண்டு 20 ஆயிரம் ரூபாய் வாடகையில் உடனடியாக வீடு பார்க்குமாறு கூறியுள்ளார். அதனால் ரிச்சான ஏரியாவில் அவருக்கு வீடு பிடிக்கும் வேலையில் சில புரோக்கர்கள் தீவிரமடைந்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget