கோலிவுட்டுக்கு அறிமுகமாகும் கிராமத்து நாயகிகள்

ஸ்டான்லிஜோஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் படம் நீதானா அந்த குயில். "இது ஒரு கிராமத்து முக்கோண காதல் கதை. கிராமத்து
பெண் பவளம் தன் முறைமாமன் முத்துவை காதலிக்கிறார். அவரே உலகம் என்று வாழ்கிறார். முத்து டூரிஸ்ட் கைடாக வேலை செய்கிறார். சுற்றுலா வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகுகிறான் முத்து. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பு திருப்பங்களுடன் படத்தை இயக்கி இருக்கிறேன். முழு படமும் திருநெல்வேலியை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் ஸ்டான்லி ஜோஸ்.

இதில் சாகர் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா, ஸ்ரேயோஜோஸ் ஹீரோயினாக நடிக்கிறார்கள். கிருஷ்ணபிரசாத் துவாரகா இசை அமைக்கிறார். ரஞ்சித் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், பொண்ணு பிலிம்ஸ் சார்பில் குஞ்ஞய்யன், ராஜ்மார்த்தாண்டம் தயாரிக்கிறார்கள். அனைவருமே புதுமுகங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget