குழந்தையின்மைக்கு புத்தம் புது சிகிச்சை

குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்சனையாகவும், சமூகப் பிரச்சனையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில்
அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன. இப்போது குழந்தையின்மைக்கு காரணம் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். 

ஸ்கேனில் 3ஈ, 4ஈ டாப்லர் (ரத்த ஒட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம் (Hysterosalpingogram ) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம். 

ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். 

ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கின்றன. மருந்துகள் மூலமும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். 

கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார்க் கட்டிகள், நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவற்றை ஸ்கேனில் 3ஈ லாப்ராஸ்கோப்பி, ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாகக் குணப்படுத்தலாம். 

இவ்வாறு நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவீதம் பேருக்கும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும். மீதமுள்ள 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் விந்து செலுத்துதல் (IUI) அல்லது டெஸ்ட்டியூப் பேபி (ஐவிஎஃப் அல்லது இக்ஸி) விந்தை முட்டையில் செலுத்துதல் முறை தேவைப்படுகிறது. 

1990-ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10 சதவீத பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 60-85 சதவீதம் வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. 

IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் முட்டையையும், கருவையும் நம் உடலில் இருக்கும் வெப்ப நிலை, ஆக்சிஜன் போன்ற வாயுக்களையும் நம் உடலில் இருக்கும் நிலை ஆகியவற்றுடன் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதைத் தவிர, லேசர் கணினி உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கார்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5வது நாள்கருவை (பிளாஸ்டோசிஸ்ட்) கர்ப்பபையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget