வீட்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டுமா

அறிமுகம் இல்லாத நபர்களையோ, ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக்குள் அனுமதிக்க நேர்ந்தால்
அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள். 

மேலும் வீட்டில் யாரும் இல்லை என்றால் அது வந்தவர்களுக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் அந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி அவர் உங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கலாம். மேலும் வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் முழு விவரங்களையும் அடையாள அட்டை நகலோடு சேகரிக்க வேண்டும். 

அவர்களுடைய புகைப்படம் மற்றும் கை ரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கை ரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருட மாட்டார்கள். 

மேலும் முதலில் அவர்கள் வேலைபார்த்த இடத்தில் ஏதாவது பிரச்சனை செய்தார்களா அல்லது நகை பணம் ஏதாவது திருடினார்களா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் வேலைசெய்த பழைய வீட்டிற்கோ அல்லது வேலைசெய்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிலோ சென்று விசாரியுங்கள். 

வேலை செய்பவர்களின் கண்ணில் படும்படி நகை, பணம் எதையும் வைக்காதீர்கள். ஏனெனில் பணத்தை பார்த்தவுடன் சிலருக்கு தவறு செய்ய வேண்டும் எண்ணம் வரும்.    
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget