வீணாகும் பொருட்களை என்ன செய்யலாம்

* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள். மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு
உரமாகப் பயன்படுத்துங்கள். 

* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள். 

* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம். 

* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்... 

* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம். 

* வீட்டில் வற்றல், தனியா, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget