தயிர் கோழி மசாலா செய்வது எப்படி

அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் இது தயி‌ர் கோழி மசாலாவை செய்து சாப்பிடலாம். சிக்கன் விரும்பாதவர்கள் மட்டனையும் இவ்வாறு
செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

நாட்டுத் தக்காளி – 1/4 கிலோ
கோழி – 1/4 கிலோ
தயிர் – 2 கப்
வெங்காயம் – 100 கிராம்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (இடித்துக் கொள்ளவும்)
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை அரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும்.

இதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

இவை வதங்கியதும் சுத்தம் செய்த கோழி க‌றியை‌ப் போ‌ட்டு அ‌த்துட‌ன் தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வத‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ர் தேவையான அளவு நீர் விட்டு வேக விடுங்கள்.

கோழிக்கறி, தொண்ணூறு சதவீதம் வெந்தவுடன் தயிர் சேர்த்து பாத்திரத்தைக் குலுக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்.

அ‌வ்வளவுதா‌ன் கோ‌ழி மசாலா தயா‌ர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget