தலை கவசத்தின் அவசியம்

இன்றைய இளம் பெண்கள் பரபரப்பான சாலைகளில், சிக்னலைக் கண்டுகொள்ளாமல் சிட்டாய்ப் பறந்துவிடுவது, துப்பட்டாவைப்
பறக்கவிட்டபடி அலட்சியமாய் ஓட்டுவது என இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆபத்தை உணராமல் அத்தனை விதிகளையும் மீறுகிறார்கள். விளைவு... ஆங்காங்கே விபத்துகள்.  

சின்னச் சின்னக் காயங்கள், சிராய்ப்புகள்கூட உடல் அளவில் ஆறாத தழும்பையும் மனது அளவில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். நமக்கு எதுவும் நடக்காது என்ற அலட்சியம்தான் விபத்து நடக்க முதல் காரணம். விபத்துக்கு உள்ளானவர்களைச் சந்திக்கும்போதோ அல்லது பாதிப்புக்கு உள்ளாகும்போதோதான் அலட்சியத்துக்கும் அவசரத்துக்கும் கொடுக்கும் விலையின் வலி புரியும். 

அதிலும் தலை கவசம் அணிவதற்கு இன்றைய பெண்கள் விரும்புவதில்லை. முகத்தை துணியால் மூடினால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். வேகமாக போகும் போது ஏற்படும் விபத்துகளால் உடலில் பல இடங்களில் குறிப்பாக முகத்தில் அதிகம் அடிப்படும். 

கை, கால்களில் ஏற்படக்கூடிய ஊனத்தைக் காட்டிலும் முகத்தில் ஏற்படக்கூடிய காயங்கள் ஆறாத தழும்புகளாக மாறி, அழகைக் கெடுத்துவிடுவதால், மன அழுத்தத்துக்குத் தள்ளப்படுகின்றனர். எலும்பு பிசகிப்போவது, மூட்டுத் தசை விலகிப்போவது போன்றவை அடுத்தக் கட்ட பாதிப்புகள். 

இதையும் கவனிக்காமல்விட்டால், ஊனத்துக்கு வழிவகுத்துவிடும். வாகன விபத்துகளால், உள் காயங்கள், எலும்பு முறிவு ஏற்படும்போது உடல் அமைப்பிலேயே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. தலையில் அடிபடுவது உச்சக்கட்ட ஆபத்து. 

இதனால், பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு, பக்கவாதத்தால் முடங்கிப்போகலாம். தலைக் கவசம் அணிவது தலையைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி. 

ஆனால், பெண்கள் அதிக வேகம் விளைவிக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ள எந்தச் சாதனங்களும் இல்லை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget