அரசியல் புரோக்கர் ஆகும் விஷால்

அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம்
நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர்.

எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட தொண்டர்கள் வேண்டும் என்றால் விஷாலை அணுகினால், அவர்கள் கேட்கும் ஆட்களை ஆயிரம் முதல் லட்சம் வரை அனுப்பி வைக்கிற புரோக்கர். பஸ் லாரி வாடகை வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர் என எல்லாவற்றுக்கு பில்போட்டு வசூலித்துவிடுவாராம். கோஷம்போட எவ்வளவு, ஆர்ப்பாட்டம் பண்ண எவ்வளவு, மறியல் பண்ண எவ்வளவு, தடியடியில் காயம் பட்டால் எவ்வளவு, ஜெயிலுக்கு போனால் எவ்வளவு என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வைத்திருப்பாராம். படம் முழுக்க அரசியல் பன்ஞ்சும் இருக்கிறதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget