காக்கிச்சட்டையில் மிரட்ட வரும் உலக அழகி

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், சிறு இடைவெளிக்கு பிறகு சஞ்சய் குப்தா இயக்கும், ''ஜாஸ்பா'' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போலீஸ் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சுஜாய் கோஸ், ''துர்கா ராணி சிங்'' என்ற படத்தை இயக்குகிறார். இதேப்போல் பிரகாஷ் ஜா, ''கங்காஜல் 2'' படத்தை இயக்குகிறார். இந்த இரண்டு படங்களும் பெண்ணை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படங்களும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதை. இந்த இரண்டு கதையிலும் ஐஸ்வர்யா ராய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இரண்டு இயக்குநர்களும் கருதுகின்றனர். 

இதுப்பற்றி விசாரித்ததில், சுஜாய் கோஸ், மற்றும் பிரகாஷ் ஜா ஆகிய இருவரும் தங்களது படத்தில் நடிக்க ஐஸ்வர்யா அணுகியது உண்மை தான். ஆனால் ஐஸ்வர்யா இருவருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லையாம். இரண்டு படங்களும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதை. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு போலீஸ் ரோலில் நடிக்க ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லையாம். ஆனால், அதேசமயம் இரண்டில் ஒரு படத்தில் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள்.

ஆக விரைவில் ஐஸ்வர்யாவை, காக்கிச்சட்டையில் காணலாம்...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget