கோலிவுட் புது வரவு சுபஸ்ரீ கங்குலி

ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா, நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு இயக்கும் படம் மானே தேனே பேயே. இதில் ஆரி ஹீரோவாக
நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை மற்றும் லண்டனில் நடக்கும் காதல் கதை.

இதில் முதலில் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. கீர்த்தி மாஜி ஹீரோயின் மேனகாவின் மகள். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறார். அடுத்து இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. அவருக்காக சில மாதங்கள் காத்திருந்த இயக்குனர் கிருஷ்ணா அவர் வராததால் பிரபல பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொ£டங்கி விட்டார்.

சுபஸ்ரீ கங்குலி பெங்காலியில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்பார்க் என்ற இந்திப் படத்திலும் நடித்துள்ளார். தற்போது மானே தேனே பேயே படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget