ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

குளோபல் இன்போடென்மென்ட் பட நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் வழங்க செராபின் ராயல் சேவியர் தயாரிக்கும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஏற்கனவே
இந்த நிறுவனம் நாடோடிகள், தென்மேற்கு பருவக்காற்று, கோரிப்பாளையம், பட்டத்து யானை உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளது.



ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் நாயகனாக விமல், நாயகியாக ப்ரியாஆனந்த் நடிக்கின்றனர். சூரி, நாசர், தம்பி ராமையா, விசாகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கண்ணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

தூத்துக்குடியில் வசிக்கும் இரு இளைஞர்கள் ஒரு பெண்ணை சந்திக்கினற்னர். அதன் பிறகு அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்ன அதில் இருந்து மீண்டார்களா என்பது கதை முழு நீள காமெடி படமாக தயாராகிறது. காதல், சென்டிமென்டும் இருக்கும். ரெயிலும் முக்கிய கேரக்டரில் வருகிறது. இருபது நாட்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பெரும் பகுதி படத்தை அதில் எடுத்துள்ளோம்.

குக்குரு குக்குரு என்ற பாடலை லட்சுமிமேனன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு இனியா நடனம் ஆடி உள்ளார். அதிக பொருட்செலவில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. சரஸ்வதி பூஜைக்கு படம் ரிலீசாகிறது.

இசை: டி.இமான், ஒளிப்பதிவு¢ பி.ஜி.முத்தையா, ஸ்டன்ட்: ஸ்டன்ட் சில்வா, பாடல்: யுகபாரதி, ஏக்நாத்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget