கோலிவுட் கோதாவில் நமீதா

பத்திரிகையாளர் முத்துராமலிங்கம் இயக்கிய சினேகாவின் காதலர்கள் என்ற படத்தை தயாரித்தவர் கலைக்கோட்டுதயம். இவர் தமிழன்
தொலைக்காட்சியின் நிறுவனர். 60 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட அந்த படத்தை ரிலீஸ் பண்ண 30 லட்சம் செலவு செய்திருக்கிறார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், அதைப்பற்றி கவலைப்படவில்லையாம் அவர். அது எனக்கு ஒரு பாட்ம் என்கிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் சினேகாவின் காதலர்கள் படத்தை இயக்கிய முத்துராமலிங்கம் மற்றும் ஜெய்லானி ஆகிய இரண்டு இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 11 லட்சம் கொடுத்து ஒரு கேமராவும் வாங்கியிருக்கிறாராம் அவர். அதோடு, அடுத்து இரண்டு படங்களை தயாரித்து ஏற்கனவே நான் சினிமாவில் போட்ட பணத்தையும் சேர்த்து எடுப்பேன் என்கிறார் நம்பிக்கையுடன். மேலும், இளைஞன் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத நமீதாவை தான் தயாரிக்கும் இரண்டு படங்களுக்குமே புக் பண்ணியுள்ளாராம்... அதற்காக அவருக்கு 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டதாம். ஆக, பல ஆண்டுகளாக தமிழில் படவாய்ப்பே இல்லாமல் கன்னட, தெலுங்கு படங்களில் அவ்வப்போது நடித்துக்கொண்டிருந்த நமீதா, தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயத்தின் கருணையினால் மீண்டும் தமிழில் பிரவேசிக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget