அருள்நிதி நடித்த உதயன், கார்த்திக் நடித்த சகுனி ஆகிய படங்களில் நடித்தவர் ப்ரணிதா. பெங்களூர் தக்காளியான இவர், கன்னட, தெலுங்கு படங்களில்
நடித்தபடி அப்படியே தமிழுக்கு வந்தார். அதோடு ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் அந்த படங்களில் நடித்தபோது தீவிரம் காட்டினார். ஆனால், உதயன் படம் தோல்வியடைந்தது. அதையடுத்து சகுனியும் ஓடவில்லை. அதனால் கோடம்பாக்கம் ப்ரணிதாவை ஓரங்கட்டி விட்டது.இந்த நிலையில்தான், 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மறுபடியும் தமிழில் மாஸ் படம் மூலம் பிரவேசித்திருக்கிறார் ப்ரணிதா. இதையடுத்தும் சில படங்களில் நடிக்க டைரக்டர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
ஆனபோதும், முன்பு மாதிரி தமிழில் முழுவீச்சில் அவர் இறங்கவில்லை. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அந்தவகையில், தமிழில் விக்ரம்பிரபு- ப்ரியாஆனந்த் நடிப்பில் வெளியான அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ப்ரியாஆனந்த் நடித்த ரோலில் இப்போது ப்ரணிதாதான் நடிக்கிறார். அதோடு, பாரில் சரக்கு அடிப்பது போன்று ப்ரியாஆனந்த் நடித்த காட்சிகள் போன்று மேலும் சில அதிரடியான காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டபோதும், எந்தவித தயக்கமும் இன்றி ஓ.கே சொல்லி அட்வான்சை கைப்பற்றி விட்டாராம் ப்ரணிதா.
நடித்தபடி அப்படியே தமிழுக்கு வந்தார். அதோடு ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் அந்த படங்களில் நடித்தபோது தீவிரம் காட்டினார். ஆனால், உதயன் படம் தோல்வியடைந்தது. அதையடுத்து சகுனியும் ஓடவில்லை. அதனால் கோடம்பாக்கம் ப்ரணிதாவை ஓரங்கட்டி விட்டது.இந்த நிலையில்தான், 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மறுபடியும் தமிழில் மாஸ் படம் மூலம் பிரவேசித்திருக்கிறார் ப்ரணிதா. இதையடுத்தும் சில படங்களில் நடிக்க டைரக்டர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
ஆனபோதும், முன்பு மாதிரி தமிழில் முழுவீச்சில் அவர் இறங்கவில்லை. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அந்தவகையில், தமிழில் விக்ரம்பிரபு- ப்ரியாஆனந்த் நடிப்பில் வெளியான அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ப்ரியாஆனந்த் நடித்த ரோலில் இப்போது ப்ரணிதாதான் நடிக்கிறார். அதோடு, பாரில் சரக்கு அடிப்பது போன்று ப்ரியாஆனந்த் நடித்த காட்சிகள் போன்று மேலும் சில அதிரடியான காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டபோதும், எந்தவித தயக்கமும் இன்றி ஓ.கே சொல்லி அட்வான்சை கைப்பற்றி விட்டாராம் ப்ரணிதா.
கருத்துரையிடுக