ஹன்சிகாவின் லேட்டஸ்ட் ஆசை

தான் அறிமுகமான மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்த ஹன்சிகா அதையடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தவர்,
பின்னர் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அந்த சமயத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்றொரு பாலிஸியும் வைத்திருந்தார்.

ஆனால், இப்போதும் அவருக்கு முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைத்தபோதும், அப்படி கிடைக்கும் படங்களில் வேறு முன்னணி நடிகைகளும் இருப்பதோடு, ஹன்சிகாவை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி விடுகிறார்கள். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தாலும் அவருக்கு திருப்தியாக இல்லையாம்.

அதனால். இரண்டாம் தட்டு ஹீரோக்கள் பக்கமும் தற்போது திரும்பியிருக்கிறார் ஹன்சிகா. குறிப்பாக, மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த அவர், அடுத்தபடியாக, விஜயசேதுபதியுடனும் நடிக்க ஆசைப்படுகிறாராம். தற்போது அவருடன் நயன்தாரா நானும் ரெளடிதான் படத்தில் நடித்து விட்ட நிலையில், ஹன்சிகாவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.

மேலும், இனிமேல் இரண்டாம் தட்டோ,முன்றாம் தட்டு ஹீரோக்களோ யாருடைய படமாக இருந்தாலும் சிங்கிள் ஹீரோயின் வேடம் உள்ள படங்களுக்கே முதலிடம் கொடுக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget