அனுஷ்காவின் அழகு ரகசியம்

அழகு விசயத்தில் எப்போதுமே அதிக அக்கறை காட்டுபவர் அனுஷ்கா. அதனால், படப்பிடிப்பு தளங்களில் வெட்ட வெயிலில் காட்சிகள்
படமாக்கப்பட்டால், டைரக்டர் ஆக்சன் சொல்வது வரை உதவியாளரை தனக்கு குடை பிடிக்கச்சொல்லுவார். அதோடு, கேமரா லைட் வெளிச்சம் தன்னை தாக்கி உடம்பில் பாதித்து விடக்கூடாது என்பதற்காக வெயில் தாக்கும் உடம்பு பகுதியை குளிர்ந்த தண்ணீரில் அவ்வப்போது நனைத்துக்கொண்டேயிருப்பார்.

மேலும், ஆல்கஹால் அயிட்டங்களை சுத்தமாக தவிர்க்கும் அனுஷ்கா, மாதம் ஒரு முறை தனது தோல் மினுமினுப்புக்காக ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்கிறாராம். இதற்கெல்லாம் மேலாக, தினமும் காலை மாலை வேளைகளில், யோகா செய்வதற்கு அவர் தவறுவதே இல்லையாம். இதன்காரணமாக அவரது உடல் மட்டுமின்றி மனசும் உற்சாகமாக உள்ளதாம்.

இப்படி அழகை அவர் பேணி காத்து வருவதினால்தான் 33 வயதாகி விட்டபோதும், அனுஷ்காவின் அழகுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டேயிருக்கிறதாம. குறிப்பாக, ஆந்திராவிலுள்ள பெருவாரியான ரசிகர்கள் அனுஷ்காவின் அழகை கவிஞர்களாட்டம் வர்ணித்து கவிதை வடித்து வருகிறார்களாம். அதனால, ரசிகர்களின் ரசனைக்குரிய நடிகையாக தொடர்ந்து திகழ வேண்டும் என்பதற்காக, பாகுபாலியைத் தொடர்ந்து தன்னை இளமையாக காண்பிக்கும் கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம் அனுஷ்கா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget