குட்டை பாவாடை குஜிலியாகும் ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிக்க வந்த ஆண்ட்ரியா, அதன்பிறகு நடித்துக்கொண்டே பின்னணியும் பாடி வந்தார். அப்படி அவர் பாடிய பல
பாடல்கள் ஹிட்டாகின. ஆனால் அனிருத்துடன் அவருககு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து பின்னணி பாடுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை அவர். மாறாக, சமீபகாலமாக பாடுவதை விட நடிப்பில் கூடுதல் கவனத்தை திருப்பி விட்டார் ஆண்ட்ரியா. அதிலும், இதுவரை டபுள் ஹீரோயினி கதைகளாக நடித்து வந்த அவருக்கு வலியவன் படத்தில் முதன்முறையாக சிங்கிள் ஹீரோயினி வாய்பபு கிடைத்திருப்பதோடு, இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கிளாமராகவும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

அதை முன்கூட்டியே மீடியாக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடந்த அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு குட்டை பாவாடை உடையணிந்து அமர்க்களமாக வந்திருந்தார் ஆண்ட்ரியா. அதோடு, இது ஒரு சின்ன சாம்பிள்தான். சரியான கதைகள் கிடைத்தால் இன்னும் அதிரடியான உடைகளை அணிந்து இன்ப அதிர்சசி கொடுககவும் தயாராக இருக்கிறேன் என்று கோலிவுட் இயக்குனர்களுக்கு அறிக்கை வாசித்திருக்கிறார் ஆண்ட்ரியா. அதனால், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு இணையாக ஆண்ட்ரியாவையும் அதிரடி கவர்ச்சி நடிகையாக்கும் முயற்சியில் சில டைரக்டர்கள் வரிந்து கட்டி நிற்கின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget