எமியை உச்ச நாயகியாக்குமா ஐ

இங்கிலாந்து நாட்டு நடிகையான எமி ஜாக்சன், இயக்குனர் விஜய்யால் 'மதராசப்பட்டிணம்' படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதல் படத்திலேயே அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த நாயகியானார் எமி. தொடர்ந்து தமிழில் அதே விஜய் இயக்கத்தில் 'தாண்டவம்' படத்திலும் நடித்தார். ஹிந்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்திலும், தெலுங்கில் 'எவடு' ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார்.

அவற்றில் 'மதராசப்பட்டிணம்' தவிர வேறு எந்தப் படமும் எமி ஜாக்சனுக்குப் பெரிய வெற்றியாக அமையவில்லை. 'ஐ' படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக தேதிகளை ஒதுக்கியதால் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். 'ஐ' படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் மோதல் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன. அதையும் மீறி, படத்தின் இசை வெளியீட்டிலும், தற்போது படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நிரூபித்து வருகிறார். 'ஐ' படம் தனக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுக்கும் என எமி அதிகம் நம்புகிறாராம்.

அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்திலும், தனுஷுடன் ஒரு படத்திலும் நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளனார். இந்த ஆண்டு முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் நடிகையாகவும் எமி இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget