சென்சார் நாயகியான பிரியங்கா

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற ஆபாச படங்களை இயக்கியவர் சாமி. அவர் தற்போது தனது ரூட்டை மாற்றி கங்காரு என்ற படத்தை
செண்டிமென்ட் கதையில் இயக்கியிருக்கிறார். அதுவும் தமிழ் சினிமாவின் அழியாத காவியங்களான பாசமலர்கள், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே போன்ற அண்ணன்-தங்கை பாச உணர்வை வெளிப்படுத்திய படங்களை குறிப்பிட்டு, அந்த வரிசையில் எனது கங்காரு படமும் இடம்பிடிக்கும் என்று அடித்து சொல்லி வருகிறர்ர்.

இந்த படத்துக்காக கேரளாவில் இருந்து அர்ஜூனா என்றொரு நடிகரை இறக்குமதி செய்திருக்கிறார் சாமி. அதேபோல் படத்தின் நாயகி வேடத்துக்காக பிரியங்காவை பாண்டிச்சேரியில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இந்த இரண்டு பேருமே அண்ணன்-தங்கை பாச உணர்வுகளை பக்காவாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்களாம்.

இதில் பிரியங்காவுக்கு கங்காருதான் முதல் படம் என்று சொல்லப்பட்டாலும் ஏற்கனவே சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே திரைக்கு வரவில்லை. அதனால் படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வரும் அவர், நடித்து முடித்ததும் பாண்டிசசேரிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆனால், இந்த கங்காரு படத்தில் நடித்த பிறகு சினிமா மீது பிரியங்காவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனால் சென்னையிலேயே தங்கி விட்ட அவர் சில புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார். மேலும், தொடர்ந்து குடும்ப பாங்கான கதாநாயகியாகவே நடிக்க விரும்பும் பிரியங்கா, கமர்சியல் கதைகள் என்றாலும் மாடர்ன் டிரஸ் அணிவேன். ஆனால் உடம்பை காட்ட மாட்டேன் என்று கதை கேட்கும்போதே சென்சார் போட்டு வருகிறார். அதனால் கங்காரு படத்தின் ரிசல்ட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டின் செண்டிமென்ட் இயக்குனர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget