மீண்டும் அவதரிக்கும் மீனு கார்த்திகா

மலையாள நடிகை மீனு கார்த்திகா அரவம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மெய்யாலுமே பொய் என்ற படத்தில் நடித்தார்.
அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். இப்போது மீண்டும் சினிமா பக்கம் வந்திருக்கிறார்.

உள்ளம் உள்ளவரை என்ற படத்தில் நடித்து வருகிறார் இதனை விஷ்ணுதாசன் என்பவர் இயக்குகிறார். சங்கர் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். காம்னாசிங், கஞ்சா கருப்பு, மதன்பாப், சதீஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சென்னைக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞன் இங்கு ஒரு கொலை பழியில் சிக்க வைக்கப்படுகிறான். கொலையான பெண் ஆவியாக வந்து அவனை கொலைப் பழியிலிருந்து காப்பாற்றுகிற கதை. நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கும் மீனு கார்த்திகாவுக்கு இந்தப் படம் நல்ல திருப்பத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget