த்ரிஷா காதல் திருமணம்

நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் றெக்கை கட்டி பறந்து
கொண்டிருந்தன. த்ரிஷா ஒரு பக்கம் அந்தச் செய்தியை லேசாக மறுத்தாலும், வருண் மணியன் அதைப் பற்றி வாயைத் திறக்கவேயில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்களிருவருக்கும் மார்ச் மாதம் திருமணம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன்னர் த்ரிஷா அவரது டிவிட்டர் வலைத்தளத்தில் அவருடைய திருமணம் பற்றி அறிவித்துள்ளார்.

மீடியாவில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு செய்தி, எனக்கும் வருணுக்கும் நிச்சயதார்த்தம், இம்மாதம் 23ம் தேதி இருவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடக்க உள்ளது

எங்களது திருமணத் தேதி பற்றி குழப்ப வேண்டாம், இன்னும் அது பற்றி நாங்கள் முடிவெடுக்கவில்லை. அது எப்போது என்று என்னிடமிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம். நடிப்பை விட்டு விலக வேண்டும் என்று நான் நினைக்கவேயில்லை. விரைவில் இரண்டு படங்களில் கையெழுத்திட உள்ளேன், 2015ல் நான்கு திரைப்படங்களின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

ஒரு வழியாக த்ரிஷா அவருடைய காதல் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget