பாம்பு சட்டை நாயகியாகும் கீர்த்தி சுரேஷ்

மாஜி ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும், இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக
நடித்து வருகிறார். அதோடு ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்போது பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். புதுமுக இயக்குனர் ஆதம் தாசன் இயக்கும் இந்த படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள். அஜீஸ் இசை அமைக்கிறார்.

பாம்பு, சட்டையை அடிக்கடி கழற்றுவது மாதிரி பணத்துக்காக மனிதர்கள் தங்கள் குணங்களை கழற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பாபி சிம்ஹா சென்னையின் நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடிக்கிறார். ஹீரோயின் இல்லாமலேயே இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ், ஹீரோயினாக முடிவு செய்யப்பட்டிருக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அடுத்த வாரம் முதல் படமாக்கப்பட இருக்கிறது.

தயாரிப்பாளர் லிஸ்டிபன் ஸ்டீபன், கீர்த்தியின் குடும்ப நண்பர். இந்த காரணங்களால் தான் கீர்த்திக்கு பாம்பு சட்டை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget