நான் சாதித்து விட்டேனா ரஜினி காந்த்

நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை, அதன்காரணமாகவே, தான் மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த்
கூறியுள்ளார்.

ரஜினி சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தாங்கள் ஏன் மீடியாக்களை தவிர்த்துவருகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நான் பெரிதாக எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. எனவே எனக்கு மீடியாவிடம் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. இப்போது மட்டுமல்ல.. முன்பும் கூட நான் என்னைப் பற்றி எதுவும் பேசியதில்லை.

நிறைய சாதித்தவர்கள் அதைப் பற்றி நிறைய பேசுவார்கள். நான் அப்படி எதுவும் செய்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் பேசுவதை விட என் வேலை பேசப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன் என்று ரஜினி பதிலளித்தார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget