குத்தாட்ட மாமி கிரண்

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் தமிழுக்கு வந்தவர் கிரண். முதல் படத்திலேயே கலக்கலாக நடித்த அவர் தமிழ் சினிமாவை கலக்கி எடுக்கப்போகிறார்
என்றுதான் கோடம்பாக்கமே கருதியது. ஆனால் அதையடுத்து சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த கிரண், திடீரென்று காணாமல் போய்விட்டார். பின்னர், குத்தாட்டமாடியாவது கோடம்பாக்கத்தில் தங்கி விட வேண்டுமென்று முயற்சி எடுத்தார். ஆனால் அவரது தொடை தட்டலுக்கு வேல்யூ இல்லாமல போனது. அதனால் தெலுங்கு, கன்னடம் என்று சென்று விட்ட அவருக்கு தற்போது ஆம்பள படத்தின் மூலம் புத்துயிர் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனைப்போன்று கிரணுக்கும் ஒரு வெயிட் ரோல் கொடுத்திருக்கிறாராம் அவர். அதனால் இதுவரை தனது கவர்ச்சியை மட்டுமே காட்டி வந்த கிரண் முதன்முறையாக திறமையை காட்டி இருக்கிறாராம். சில காட்சிகள் கிரணா? இது என்று யூனிட்டே ஆச்சர்யப்படும் அளவுக்கெல்லாம் ஆக்டு கொடுத்தாராம் கிரண். அதைப்பார்த்து, அவருக்கு இன்னும் கூடுதல் சீன்களை கொடுத்து பெரிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக்கி விட்டாராம் சுந்தர்.சி., அதன்காரணமாக, ஆம்பள படம் தனக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுக்கப்போகிறது என்று எதிர்பார்க்கத்தொடங்கிய விட்ட கிரண், குத்தாட்டத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர கேரக்டர் நடிகையாகி விட வேண்டும் என்று சில டைரக்டர்களிடம் திறமைக்கு சான்ஸ் கேட்டு வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget