காதல் தோல்வியில் வரலட்சுமி

பாலா இயக்கத்தில் சசிகுமார்- வரலட்சுமி நடித்து வரும் படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் கரகாட்ட கலைஞர்களாக நடித்து வரும் அவர்கள்
கடந்த ஒன்றரை மாதங்களாக தஞ்சாவூரில் முகாமிட்டு நடித்து வருகின்றனர். படத்தில் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை அவர்களை கரகாட்டகாரர்களாகவே வாழ வைக்க வேண்டும் என்பதற்காக மொத்த வசன காட்சிகளையும் அங்கு படமாக்கி விட்டே சென்னை திரும்புகிறாராம் பாலா.
அதனால் தாரை தப்பட்டையில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகளும் தற்போது தஞ்சாவூரில் டேரா போட்டிருக்கிறார்கள். மேலும். இதுவரை அப்படத்தில் வரலட்சுமி விலைமாது வேடத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்போது அப்படத்தின் கதை பற்றி விசாரித்தால், சசிகுமாரின் முறைப்பெண்ணாக வரலட்சுமி நடித்துக்கொண்டிருககிறாம். அவரை வார்ததைக்கு வார்த்தை மாமா மாமா என்றுதான் அழைப்பாராம் வரலட்சுமி.

மேலும், கரகாட்டக்கலைஞர்களான இவர்களுக்கிடையே தீவிரமான காதல் இருந்தபோதும், அவர்களை பிரித்து வரலட்சுமியை வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்களாம். இதனால் காதல் தோல்வியில் இருவருமே வாடும் காட்சிகளும், பாடலும் உள்ளதாம். அதோடு, அவர்கள் காதலர்களாக நடித்துள்ள காட்சிகள் ரொம்ப ஜாலியாக படமாக்கப்பட்டுள்ளதாம். கரகாட்டக்கலைஞர்களுக்கே உரிய காமெடி கலாட்டாவும் படத்தில் இடமபெற்றிருக்கிறதாம். அந்த வகையில், சசிகுமார்-வரலட்சுமி சம்பந்தப்பட்ட டூயட் பாடல்கள் மட்டுமே 4 உள்ளதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget