நடிப்புக்கு டாட்டா காட்டும் த்ரிஷா

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாகவும், சினிமாவைவிட்டு முழுவதும் விலகி சென்றுவிடப்போவதில்லை என்று த்ரிஷா,
டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

படத்தில் சில காட்சிகளில் தலைகாட்டிக்கொண்டிருந்த நடிகை த்ரிஷா, 2002ம் ஆண்டில் வெளியான "மவுனம் பேசியதே" படத்தின் மூலம், ஹீரோயினாக உருவெடுத்தார். பின், பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது, இந்தி உள்ளி்ட்ட பிறமொழிப்படங்களிலும் த்ரிஷா நடித்து வருகிறார். த்ரிஷா, திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது.

அஜித், த்ரிஷா நடிப்பில் என்னை அறிந்தால் படம், வரும் 29ம் தேதி, திரைக்கு வர உள்ளது.

தெலுங்கு நடிகர் ராணாவுடன், த்ரிஷா இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக எல்லாரும் எண்ணியிருந்தபோது, திடீரென்று, அவர்கள் பிரிந்தனர்.

பின், திடீரென்று, படத்தயாரிப்பாளர் வருண் மணியனுடன், த்ரிஷா இருப்பதுபோல படம் இணையதளங்களில் வெளியானது. இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையி்ல், திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாகவும், சினிமாவை விட்டு முழுவதுமாக விலகிச்செல்லாமல், சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ளதாக, த்ரிஷா, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்..
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget