அதிர்ஷ்டநாயகி ஜாக்குலின் பெர்னான்டஸ்

கிக் என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்த நான், மீண்டும் ஒரு வெற்றிப்படமான ராய் படத்தில் நடித்துள்ளதன் மூலம், அதிர்ஷ்டக்காரியாக தன்னை
உணர்வதாக, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார்.
கிக் படத்தின் மூலம் இளைய தலைமுறையினரை கிறங்கடிக்க வைத்த ஜாக்குலின் பெர்னான்டஸ், ராய் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராய் படத்தில் தனது கேரக்டர் மற்றும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஜாக்குலின்....

ராய் படத்தில் உங்களது கேரக்டர் பற்றி?

ராய் படத்தில், நான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளேன். இரண்டு கேரக்டர்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒரு கேரக்டரின் பெயர் ஆயிஷா, டைரக்டர் கேரக்டர் எனக்கு. அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். மாடர்ன் பெண் கேரக்டர் என்றபோதிலும், தினமும் பார்க்கும் சாதாரண பெண் போன்று அந்த கேரக்டர் இருக்கும்.

மற்றொரு கேரக்டர் குறித்து...

தியா என்ற மற்றொரு கேரக்டரிலும் நடித்துள்ளேன். இது ரன்பீர் கபூருக்கு ஜோடி. பணக்கார வீட்டுப் பெண்ணான தியா, சமூகத்தில் எவருடனும் ஒன்ற மாட்டாள், யாருடனும் அதிகமாக பேச மாட்டாள். தன் வாழ்க்கை உண்டு தான் உண்டு என்று நினைப்பவள். தியா, ஆயிஷா இரண்டுமே, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கேரக்டர்கள். இந்த படத்தில் நடித்தது, புதுவித அனுபவமாக இருந்தது. எனது திரைப்பயணத்தில், முதன்முறையாக, இரட்டை வேடங்களில் நடித்துள்ளேன்.

உங்கள் உண்மை வாழ்க்கையை இந்த கேரக்டர்கள் பிரதிபலிக்கின்றவா?

நிச்சயமாக..நான் சமூகத்தில் அனைவருடனும் சகஜமாக பழகும் இயல்புடையவள். நான் மற்றவர்களுடன் பேசி, அவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நான் அதிகம் விரும்புபவள். நான் பயம் என்பதை அறியாதவள். எனக்கு 19 வயது இருக்கும்போதே, நான் தனியாக, இந்தியாவிற்கு வந்துள்ளேன். சி்று வயதில் இருந்தே, என்னுடைய தேவைகளை, நானே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு மனதளவில் தயாராகி விட்டேன். எனது அந்த திறமை தான், இந்த படத்தில், ஒரே நேரத்தில், பயமறியா பெண், பயந்து பயந்து வாழும் பெண் என இருவித வேறுபட்ட கேரக்டர்கள் பண்ண உதவியாக இருந்தது.

இரட்டை வேடம் கஷ்டமாக இருந்ததா?

உண்மை தான். நடிப்பதற்கு நான் சிரமப்படவில்லை. ஆனால், நான் ஹி்ந்தியில் மிகவும் வீக். ஆனால், படத்தின் பெரும்பாலான வசனங்கள், ஹிந்தியிலேயே இருந்தது. அதை பேசி நடிப்பதற்கு தான் மிகவும் சிரமப்பட்டேன். இருந்தபோதிலும், மிகவும் சிரமப்பட்டு, இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கடின உழைப்பிற்கேற்ற பலன் உண்டு என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு.

அர்ஜூன், ரன்பீர் உடன் நடித்தது குறித்து...

ராய் படத்தி்ல், ரன்பீருக்கு ஜோடியாக தியா கேரக்டரிலும், அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக ஆயிஷா கேரக்டரிலும் நடித்துள்ளேன். ரன்பீர் உடனான பகுதி மிகவும் ரொமான்டிக்காகவும், அதே சமயம், மிகுந்த அழகுடனும் இருக்கும். அர்ஜூன் ராம்பாலுடனான பகுதியில், ரொமான்டிக் சிறிதுதான் இருக்கும், ஆனால் புரொபஷனலிசம் அதிகமாக இருக்கும். ரசிகர்கள், ரன்பீர் உடன் வரும் தியா கேரக்டரை மிகவும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

கிக், ராய். எந்த படம் கஷ்டமாக இருந்தது?

ராய் படத்தை ஒப்பிடும்போது, கிக் படம் தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றே நான் சொல்லுவேன். ஏனெனில், கிக் படம் வெற்றியடைந்தவுடன், எனது மனோதைரியமும் அதிகரித்துவிட்டது. ஆனால், இதுவே,கிக் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு உள்ளுக்குள் மிகுந்த பயமாகவே இருந்தது. முதல் படம் ஹிட் ஆகவில்லையென்றால், உடனடியாக பீல்ட் அவுட் ஆகிவிடுவோமே என்று....ஆனால், அதிர்ஷ்டவசமாக, கிக் படமும் ஹிட் ஆனது. ரசிகர்களும், என்னை ஏற்றுக்கொண்டனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ராய் படத்தில், இரட்டை வேடங்களில் நடித்தது கஷ்டமாக தான் இருந்தது என்றாலும், எனது மனோதிடத்தால், அதை நான் வென்றுவிட்டேன்.

வெற்றி என்றால்...உங்கள் பார்வையில் என்ன?

வெற்றி என்பதன் உண்மையான விளக்கம் எனக்கு தெரியாது. எனக்கு நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை. அன்றாட வேலைகளை அன்றன்றைக்கே, முடித்துவிடும் குணம் உடையவள் நான். நான் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. கடவுளின் கிருபையால், கிக் படம் வெற்றியடைந்தபோதிலும், சும்மா இருக்காமல், எனது கடின உழைப்பை தொடர்ந்து செய்துகொண்டே தான் வருகிறேன். கடின உழைப்பே, முன்னேற்றத்திற்கான ஒரே வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

சல்மான் கான் உங்களது நெருங்கிய நண்பராமே?

(சிரித்துக்கொண்டே...) அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. திரையுலகில் எனக்கு அதிகளவில் நண்பர்கள் உள்ளனர். எனது நட்பு பட்டியலில் ரித்தேஷ் தேஷ்முக், சஜித் நாடியாத்வாலா உள்ளிட்டோரும் உள்ளனர். ஆனால், எனது நண்பர்கள் பட்டியலில், சல்மான் கானை, நான் முதலாவதாக வைத்துள்ளேன். ஏனெனில், கிக் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்து, என்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர். சல்மான் கான் மிகச்சிறந்த மனிதர். அவரின் தயவால் தான் இந்த படத்தில் நடித்து பேரும் புகழும் பெற்றேன். அவரிடம் இருந்து நான் சிறந்த பழக்கவழக்கங்களை நான் கற்றுக்கொண்டுள்ளேன் என்று ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget