செலக்சன் யுக்தியை மாற்றிய சமந்தா

முன்பெல்லாம் சமந்தாவை ஒரு படத்துக்கு புக் பண்ண சென்றால், கதையைத்தான் துருவி துருவி கேட்பார். அதில் தனக்கு நடிப்பதற்கு எந்த
அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் ஆராய்வார். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க கைநீட்டி அட்வான்ஸ் வாங்குவார்.

ஆனால் இப்போது சமந்தாவின் செலக்சன் மாறி விட்டது. அதாவது, முதலில் கம்பெனி, பின்னர் ஹீரோ. இவை இரண்டுமே பெரிய அளவில் இருநதால் அவர் கதையைகூட பொருட்படுத்துவதில்லை. இவ்வளவு பணம் போட்டு படமெடுப்பவர்கள் நல்ல கதையைத்தானே செலக்ட் பண்ண்யிருப்பார்கள். அதோடு. இத்தனை பெரிய ஹீரோ நடிக்கிறார் என்றால் கதை மீது நம்பிக்கை இல்லாமலா நடிப்பார் என்று சொல்லி, படததை டிக் பண்ணி விடுகிறார்.

அதேசமயம், பிரபலமில்லாத ஹீரோக்கள், சிறிய பட்ஜெட் பட கம்பெனிகள் தன்னை நடிக்க அழைத்தால், நேரடியாக அவர் அதை ஏற்க மறுப்பதில்லை. மாறாக, அந்த டைரக்டர்களை அழைத்து கதை கேட்டு விட்டு, தனக்கு பிடித்த கதையாக இருந்தாலும்கூட, ஏதாவது ஒரு குற்றம் குறையை சொல்லி தன்னால் நடிக்க முடியாது என்று திருப்பி அனுப்புகிறாராம். இதனால் தரமான படங்களை தயாரிக்கும் மீடியம் பட்ஜெட் கம்பெனிகளும், டைரக்டர்களும் சமந்தா மீது அதிருப்தியில் உள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget