மம்மியாக கும்மியடிக்கும் சரளா

கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவையைச்சேர்ந்த சரளா. அந்த படத்தில் சிரிப்பு நடிகையாக நடித்தவர்
இப்போதுவரை சிரிப்பு நடிகையாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்தாலும் அவரை செண்டிமென்ட் ஏரியா பக்கம் அதிகமாக செல்ல விடாமல் காமெடிக்கே பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், மனோரமாவிற்கு பிறகு அவர் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோவை சரளா இதுவரை காமெடி சரளாவாகவே நடித்து வந்த நிலையில், தற்போது கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் முதன்முதலாக சீரியசான அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த படத்தின் க்ளைமாக்சில், நல்லவன் சாகவும் கூடாது. தப்பானவன் வாழவும் கூடாது என்று கெட்டவர்களை அழிக்க கார்த்திக்கிற்கு ஆணை போடும் ஒரு சீரியசான அம்மாவாக நடித்திருக்கிறார் கோவை சரளா. ஆக, பொறுத்ததுபோதும் பொங்கி எழு மனோகரா டயலாக்கின் ஆவேசத்தில் அந்த காட்சியில் நடித்திருக்கிறார் கோவை சரளா. அதனால் சிரிப்பு நடிகையாக முத்திரை குத்தப்பட்ட கோவை சரளாவின் மீது இனிமேல் சீரியசான சென்டிமென்டான அம்மா என்கிற முத்திரை விழுந்து மனோரமாவின் இடத்தை அவர் பிடிப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget