நான் மாஸ் ஹீரோயின் நயன்தாரா

கஹானி ரீமேக்கான அனாமிகா படம் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடியிருந்தால் இப்போது நயன்தாராவின் ரேஞ்சே வேற மாதிரி ஆகியிருக்கும்.ஆனால் படம்
ஏமாற்றி விட்டது. ஆனபோதும், அவரது மார்க்கெட்டிற்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. இப்போதும் அவரிடம் கால்சீட் கேட்டு இல்லை என்று சொன்னால்தான் மற்ற நடிகர்களை நாடிச்செல்கிறார்கள் டைரக்டர்கள். அந்த அளவுக்கு நயன்தாராவுக்கு மாஸ் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த மாஸை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நயன்தாராவும் உறுதியாக இருக்கிறார். அதனால், முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே டூயட் பாடுவது என்ற பாலிஸியை கடைபிடிக்கும் நயன்தாரா, பிரபலமில்லாத ஹீரோவின் படமாக இருந்தால் அதில் நாம்தான் ஹீரோ போன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.

அப்படி இல்லாதபட்சத்தில், யாராவது பின்தங்கிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் படக்கூலியை வழக்கத்தை விட எக்ஸ்ட்ராவாக ஒரு கோடி சொல்லி அடிக்கிறாராம். அதனால் மார்க்கெட் இல்லாத ஹீரோக்களை வைத்து படமெடுப்பவர்கள் சிறிய பட்ஜெட்டிலேயே படமெடுப்பதால், நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் அவர்களாகவே வேறு நடிகைகளை தேடிச்சென்று விடுகிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget