எஸ்.எஸ்.சி.யின் காவல்படையில் வேலை

மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் பிரசித்தி பெற்ற ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு சமீபத்தில் மத்திய காவல் படைகளில்
காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் துணை உதவி ஆய்வாளர் பணியிடங்கள் 2902ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை
வெளியிட்டுள்ளது.

காலியிட விபரங்கள்: எஸ்.எஸ்.சி.,யின் இந்தப் பணியிடங்களில் துணை ஆய்வாளர் காலியிடங்களில் சி.ஆர்.பி.எப்.,பில் 221ம், பி.எஸ்.எப்.,பில் 607ம், ஐ.டி.பி.பி.,யில் 289ம், சி.ஐ.எஸ்.எப்.,பில் 536ம், எஸ்.எஸ்.பி.,யில் 53ம், உதவி துணை ஆய்வாளர் காலியிடத்தில் சி.ஐ.எஸ்.எப்.,பில் 1101ம், டில்லி உதவி ஆய்வாளர் பதவிக்கு 95 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். டில்லி போலீஸ் பிரிவுக்கு ஓட்டுனர் உரிமம் கூடுதலாக தேவைப்படும்.

தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். காவல் படை சார்ந்த பதவி என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.100/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாகவோ அல்லது எஸ்.பி.ஐ., சலான் மூலமாகவோ அல்லது ஆன்-லைன் முறையிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற முறைகளில் தொடர்புடைய எஸ்.எஸ்.சி., மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.04.2015

இணையதள முகவரி: www.ssc.nic.in
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget