நான் குத்துப் பாட்டு நடிகையா பொரிந்து தள்ளிய நடிகை

நான் நடனம் ஆடத் தயார்; ஆனால், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட மாட்டேன், என, பொரிந்து தள்ளியிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. நச் பாலியே 7
என்கிற ஸ்டார் ப்ளஸ் டிவியின், ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அவரிடம், 2009ல் வந்த சல்மான் கானின், மெய்ன் ஆர் மிசஸ் காஹ்னா படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தீர்கள்; அதற்குப்பின், இப்போது வேறு படங்களில், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடு வீர்களா என, கேட்கப்பட்ட கேள்வி தான் அவரை கொதித்தெழ வைத்தது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த ப்ரீத்தி கூறியதாவது: நான், அந்த குத்துப்பாட்டுக்கு, நடனம் ஆடியதற்கு ஒரே காரணம், சல்மான். அவர், என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்காக, நான் எதையும் செய்வேன். அதே நேரத்தில், நான் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுகிற வளாக ஆகிவிடமாட்டேன். எனக்கு நடனம் ஆடப் பிடிக்கும். உங்களுடைய வீட்டு விஷேசங்களில், க்ளப்களில், மகிழ்ச்சியாக நான் நடனம் ஆடத் தயார். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவதற்காக நான் நடிகையாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget