கோலிவுட்டை கலக்க வரும் சரிதா நாயர்

கேரள மாநிலத்தில் சோலார் பேனல் ஊழல் மூலம் புகழ்பெற்றவர் சரிதா நாயர். கேரள காங்கிரஸ் அரசை ஆட்டம் காண வைத்தவர். போலீஸ், கோர்ட், சிறை என்று பிசியாக இருந்தாலும் இப்போது
நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில குறும்படங்களில் நடித்த சரிதா நாயர், தற்போது வைய்யாவெலி என்ற படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். காப்ரே டான்சராக இருந்து போலீசாக வளர்ந்து தாதாக்களை வேட்டையாடும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர சுரேஷ் கோபியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தன் சொந்த கதையில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கனலி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு பேய் படம். சில நகர்புறத்து இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் ஒரு மலைவாழ் பெண் பேயாக வந்து அவர்களை பழிவாங்குகிற கதை. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் சரிதான நாயர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget