தலபதி டாப் கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்து வந்தபோதே, தனுசுடன் தொடரி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தெலுங்கிற்கு சென்ற இரண்டு படங்களில் நடித்து வந்த அவர் அடுத்தபடியாக தமிழில் மணிரத்னம் படத்தில்
நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடிசனுக்கு சென்று திரும்பிய கீர்த்தி சுரேசுக்கு மணிரத்னம் அழைப்புவிடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்து வந்தபோதுதான் விஜய்யின் 60வது படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் பரதன்.

இதனால் சந்தோசத்தில் துள்ளிக்குதித்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் படத்தை முடித்ததும் விஜய்யுடன் நடித்து வருகிறார். முதலில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் இப்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் நடித்து வந்த ஐன இஷ்டம் நாவு -என்ற தெலுங்கு படத்தின் பேஜ் ஒர்க் வேலைகளுக்கு அழைத்தபோதுகூட, விஜய் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறேன். அதனால் இந்த படத்தில் நடித்து முடிக்கிறவரை கவனத்தை சிதற விடமாட்டேன் என்று அந்த படக்குழுவை வெயிட்டிங்கில் வைத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget