வில்லனான பவர் ஸ்டார்

மிர்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் புதுமுகம் நைனா சர்வார் நடித்துள்ள படம் 'அட்றா மச்சான் விசிலு'. ஜீவா நடிப்பில் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கி
உள்ளார். காசி விஸ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சினிமா ஹீரோவாகவும், அவர் வில்லத்தனங்கள் செய்துவது போன்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதை இயக்குனர் திரைவண்ணனும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ, அதேபோலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான். எந்த நடிகரையும் குறிப்பிட்டு பண்ணலை. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.. அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை.

கச்சேரி ஆரம்பம் படத்துக்குப்பிறகு 5 வருடம் கழித்து இந்தப்படத்தை இயக்கிருக்கேன். ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்ன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன். கச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னு தான் சொல்வாங்க. ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு, என்கிறார் திரைவண்ணன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget