சின்னத்திரை நாயகி ஷில்பா

செல்லமே, என் இனிய தோழியே, கண்மணியே, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷில்பா. சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர், தேடிவரும் எல்லா தொடர்களையுமே
ஏற்றுக்கொள்வதில்லையாம். கதாபாத்திரங்கள் தனக்கு பிடித்தால் மட்டுமே ஏற்று நடித்து வருகிறாராம்.

இதுபற்றி ஷில்பா கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை பாசிட்டிவ், நெகடீவ் என எல்லாவிதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். அதோடு எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதைகளில் முக்கிய வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் ரொம்ப பரிட்சயம். அதோடு நான் ஆரம்பத்தில் இருந்தே வெயிட்டான வேடங்களாக நடிப்பதால் என்னிடமிருந்து வித்தியாசமான நடிப்பை எதிர்பார்ப்பார்கள்.

அதனால்தான், நான் உப்புசப்பில்லாத கேரக்டர்களில் எக்காரணம் கொண்டு நடிப்பதில்லை. சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அதோடு, நேயர்களுக்கு பிடிக்கிறது என்பதை விட நான் ஏற்று நடிக்கும் வேடங்கள் முதலில் என்னை கவர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் எந்த சீரியல்களிலும் நடிப்பதில்லை என்று கூறும் ஷில்பாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையாம். இப்போதைக்கு சீரியல்களில் நடிப்பதற்கு அவருக்கு நேரம் போதுமானதாக உள்ளதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget