ஹாரர் கதையில் திரிஷா

காதல் கதைகளாக நடித்தது வரை எந்தவித சிரமமும் இல்லாமல் ஹாயாக நடித்து வந்தார் த்ரிஷா. ஆனால் அரண்மனை-2 படத்தில் பேயாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து நடிகர்களை
சண்டை காட்சிகளில் ரோப்பில் கட்டி தொங்க விடுவது போன்று த்ரிஷாவையும் ரோப்பில் தொங்க விட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நாயகி, மோகினி என்ற இரண்டு படங்களுக்காவும் கடினமாக உழைத்து வருகிறார் த்ரிஷா. இதில் நாயகி படத்திற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அவர் பேயாக வந்து கெட்டவர்களை அழிக்கும் காட்சிகளை கிட்டத்தட்ட 10 நாட்கள் படமாக்கினார்களாம். அந்த பத்து நாட்களுமே பெரும்பாலும் ரோப்பில்தான் பறந்து பறந்து தாக்கினாராம் த்ரிஷா.

ஒருவழியாக அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இப்போது மாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் பட பேய்களைப் போன்று இந்த படத்தில் திரிஷாவை மிரட்டலாக காண்பிக்கும் மாதேஷ், அவர் பேயாக தோன்றும் காட்சிகளை பெரும்பாலும் உயரமான பில்டிங் களுக்கு மேலேதான் படமாக்குகிறாராம். அதனால் பல அடுக்குமாடி பில்டிங் களுக்கு மேலே கிரேன் வைத்து அதில் ரோப்பில் தொங்கியபடி நடிக்கிறாராம் திரிஷா. இப்படி ஆரம்பத்தில் படமாக்கியபோது ரொம்பவே பயந்து போனாராம் த்ரிஷா. பின்னர் படிப்படியாக சகஜநிலைக்கு திரும்பி நடித்து வருகிறாராம். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக இந்த மோகினி படத்துக்காக அதிகப்படியாக உடலை வருத்தி நடித்து வருகிறாராம் த்ரிஷா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget