எல்ரெட்குமார் தயாரித்து வரும் படம் வீரா. இந்த படத்தில் முதலில் விஷ்ணுவிஷால் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அவருக்குப்பதிலாக கிருஷ்ணா கமிட்டானார். இந்த படத்தில் கருணாகரன் காமெடியனாக நடிக்க,
மலையாள நடிகை ஐஸ்வர்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்த வீரா படம் எனக்கு தமிழில் பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று அடித்து சொல்கிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யாமேனன் கூறும்போது, தமிழில் ஒரு நல்ல படத்தில்தான் என்ட்ரி கொடுக்க வேண்டும என்பதற்காக பல கதைகளை கேட்டு இந்த வீரா படத்தில் கமிட்டானேன். வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். அதேசமயம், ஸ்லம் ஏரியா பெண்ணாக இல்லாமல் நார்மலான கெட்டப்பில் தோன்றுகிறேன். இந்த படத்திற்காக சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமராக நடித்துள்ள எனக்கு, பர்பாமென்ஸ் பண்ணுவதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் வீரா படம் வெளியாகும்போது தமிழில் நான் பேசப் படும் நடிகையாகி விடுவேன்.
மேலும், வீரா படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இப்போது பிரேக் கொடுத்துள்ளார்கள். இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வந்து விடும். தமிழில் வீராவில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் நடிக்க முயற்சி எடுத்தேன். அதன்காரணமாக ஒரு தெலுங்கு படம் கிடைத்துள்ளது. அந்த படத்திலும் லிமிட்டான கிளாமராகத்தான் நடிக்கிறேன். காரணம் நான் பர்பாமென்ஸ் கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
மலையாள நடிகை ஐஸ்வர்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்த வீரா படம் எனக்கு தமிழில் பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று அடித்து சொல்கிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யாமேனன் கூறும்போது, தமிழில் ஒரு நல்ல படத்தில்தான் என்ட்ரி கொடுக்க வேண்டும என்பதற்காக பல கதைகளை கேட்டு இந்த வீரா படத்தில் கமிட்டானேன். வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். அதேசமயம், ஸ்லம் ஏரியா பெண்ணாக இல்லாமல் நார்மலான கெட்டப்பில் தோன்றுகிறேன். இந்த படத்திற்காக சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமராக நடித்துள்ள எனக்கு, பர்பாமென்ஸ் பண்ணுவதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் வீரா படம் வெளியாகும்போது தமிழில் நான் பேசப் படும் நடிகையாகி விடுவேன்.
மேலும், வீரா படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இப்போது பிரேக் கொடுத்துள்ளார்கள். இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வந்து விடும். தமிழில் வீராவில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் நடிக்க முயற்சி எடுத்தேன். அதன்காரணமாக ஒரு தெலுங்கு படம் கிடைத்துள்ளது. அந்த படத்திலும் லிமிட்டான கிளாமராகத்தான் நடிக்கிறேன். காரணம் நான் பர்பாமென்ஸ் கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
கருத்துரையிடுக