மோகினியாக மிரட்டும் த்ரிஷா

நாயகி படத்திற்குப் பிறகு த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் மோகினி. இந்தப் படத்தை மதுர, அரசாங்கம், மிரட்டல் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
லண்டனுக்கு அருகாமையில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்பமானது.

மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த விஜய் நடித்த மதுர படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. அடுத்து அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய அரசாங்கம் படமும் த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருந்தாலும் வியாபார ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. வினய், பிரபு நடித்த மிரட்டல் படம் தோல்வியடைந்தது. இந்தப் படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மாதேஷ் படம் இயக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கருடன் ஆரம்ப காலத்திலிருந்தே இணை இயக்குனராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தவர் மாதேஷ். அதன் பின் ஏற்பட்ட ஏதோ ஒரு மன வருத்தத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். ஷங்கரிடமிருந்து வெளியில் வந்த பிறகு மாதேஷ் தயாரித்த சாக்லெட் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

மோகினி படத்தை இன்றைய டிரென்டில் எடுத்து மீண்டும் தன்னைப் பற்றி பேசப்பட வைக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் மாதேஷ் இருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget