கோலிவுட் கோதாவில் ஆரா

விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கியவர் மஜீத். தமிழன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல்போனதால் தொடர்ந்து மஜீத்துக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல வருட
போராட்டத்துக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஓடவில்லை. மீண்டும் பெரும் போராட்டத்துக்குப் பிறகு தற்போது 'பைசா' என்ற படத்தை இயக்குகிறார் மஜீத்.

'பைசா' சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ரசிகர்களின் பாராட்டு பெற்ற 'சாட்டை', 'கோலி சோடா', 'காக்கா முட்டை' படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகி உள்ளதாம். இப்படத்தை கான்பிடண்ட் ஃபிலிம் கஃபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.ட்ரீம் வேல்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பைசா படத்தில் 'பசங்க' ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கிறார். ஆரா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். சினிமா பி.ஆர்.ஓ. துரைபாண்டியின் மகள் இவர். 'பைசா' படத்தில் நடித்திருப்பது குறித்து ஆராவிடம் கேட்டால்... ''எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வர காரணமாக இருந்தவர் என் தந்தைதான்.'' என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget