சிறு பட்ஜெட் படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த தன்ஷிகா எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவாண் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின்
முக்கிய நடிகையானார். தற்போது சூப்பர் ஸ்டாரின் மகளாக கபாலியில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். தன்ஷிகா வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது கைகொடுத்த படம் காத்தாடி. சமீபத்தில் வெளிவந்த கத சொல்லப்போறோம் படத்தை இயக்கிய எ-ஸ்.கல்யாண் இயக்கி உள்ளார். நடிகை மகேஸ்வரியின் தம்பி அபிஷேக் ஹீரோவாக நடிக்கிறார் இவர்கள் தவிர சம்பத், ஜான் விஜய், மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்க்ள. பவன், தீபன் இசை அமைத்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு தன்ஷிகா உருக்கமாக பேசியதாவது: சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்காத நான் நடிப்புதான் இனி எல்லாம் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சினைகள் அவற்றிலிருந்து என்னை காப்பாற்றி வழிநடத்தி வந்தது எனது அங்கிள் ஒருவரும், எனது தந்தையும்தான். நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பவள். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். ஜிம்னாஸ்டிக் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பெரிய படங்கள், பெரிய இயக்குனர் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். என்றார் தன்ஷிகா.
முக்கிய நடிகையானார். தற்போது சூப்பர் ஸ்டாரின் மகளாக கபாலியில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். தன்ஷிகா வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது கைகொடுத்த படம் காத்தாடி. சமீபத்தில் வெளிவந்த கத சொல்லப்போறோம் படத்தை இயக்கிய எ-ஸ்.கல்யாண் இயக்கி உள்ளார். நடிகை மகேஸ்வரியின் தம்பி அபிஷேக் ஹீரோவாக நடிக்கிறார் இவர்கள் தவிர சம்பத், ஜான் விஜய், மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்க்ள. பவன், தீபன் இசை அமைத்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு தன்ஷிகா உருக்கமாக பேசியதாவது: சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்காத நான் நடிப்புதான் இனி எல்லாம் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சினைகள் அவற்றிலிருந்து என்னை காப்பாற்றி வழிநடத்தி வந்தது எனது அங்கிள் ஒருவரும், எனது தந்தையும்தான். நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பவள். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். ஜிம்னாஸ்டிக் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பெரிய படங்கள், பெரிய இயக்குனர் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். என்றார் தன்ஷிகா.
கருத்துரையிடுக