விருது வாங்கிய வரலட்சுமி

'பீப்பிள் ஃபார் கேட்டில் இந்தியா' என்ற அமைப்பு ஆண்டு தோறும் விலங்குகளை பாதுகாக்க உழைக்கும் பிரமுகர்களுக்கு விலங்கு நேசிப்பாளர் (அனிமல் லவ்வர்) விருது வழங்கி வருகிறது. இந்த
ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. தமிழக கவர்னர் ரோசைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விஷால், வரலட்சுமி உள்ளிட்ட விலங்கு ஆர்வலர்களுக்கு விருது வழங்கினார்.

விழாவில் 'பீப்பிள் ஃபார் கேட்டில் இந்தியா' அமைப்பின் நிறுவனர் ஜி.அருண் பிரசன்னா இணை நிறுவனர் எஸ்.சுசித்ரா, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, இந்திய விலங்குகள் நல வாரிய துணை தலைவர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும் விஷாலும், வரலட்சுமியும் ஜோடியாக கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய விஷால் “திருட்டு விசிடியை தடுப்பது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் பேசி இருக்கிறோம். அவரிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. திருட்டு விசிடிய தடுக்க முடிந்த வரை முயற்ச்சி செய்கிறோம். இறுதி முடிவு செய்ய வேண்டியது தயாரிப்பாளர் சங்கம்தான். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது தயாரிப்பாளர் மதன் எங்கிருந்தாலும் உடனே திரும்ப வேண்டும். அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும். என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget