'சக நடிகையரான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா எல்லாம், ஹாலிவுட்டுக்கு படையெடுத்து விட்டனர்; நீங்கள் எப்போது' என, கேட்டால், அக்னி குழம்பை, நம் மீது அள்ளி வீசுகிறார் அனுஷ்கா
சர்மா. 'அவர்களுக்கு அதிக திறமை இருக்கிறது; அதனால் ஹாலிவுட்டுக்கு போகின்றனர்; எனக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என வைத்துக் கொள்ளுங்களேன்' என, சீறுகிறார். 'உண்மையை சொல்லப் போனால், ஒரு சில காட்சிகளில் மட்டும் முகத்தை காட்டி விட்டு போகும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை; நான் என்ன சோளக்காட்டு பொம்மையா? ஹாலிவுட் படங்களில் நம்மை போன்றவர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு தான் கிடைக்கிறது' என்கிறார். விசாரித்தால், 'ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு, வாய்ப்பு தேடி வரவில்லையே என்ற டென்ஷனிலும், உச்சகட்ட வயிற்றெரிச்சலிலும் இருக்கிறார், அனுஷ்கா. அந்த கோபத்தைத் தான், இப்படி காட்டுகிறார்' என்கிறது பாலிவுட்.
சர்மா. 'அவர்களுக்கு அதிக திறமை இருக்கிறது; அதனால் ஹாலிவுட்டுக்கு போகின்றனர்; எனக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என வைத்துக் கொள்ளுங்களேன்' என, சீறுகிறார். 'உண்மையை சொல்லப் போனால், ஒரு சில காட்சிகளில் மட்டும் முகத்தை காட்டி விட்டு போகும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை; நான் என்ன சோளக்காட்டு பொம்மையா? ஹாலிவுட் படங்களில் நம்மை போன்றவர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு தான் கிடைக்கிறது' என்கிறார். விசாரித்தால், 'ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு, வாய்ப்பு தேடி வரவில்லையே என்ற டென்ஷனிலும், உச்சகட்ட வயிற்றெரிச்சலிலும் இருக்கிறார், அனுஷ்கா. அந்த கோபத்தைத் தான், இப்படி காட்டுகிறார்' என்கிறது பாலிவுட்.
கருத்துரையிடுக