பிஷ் மசாலா செய்வது எப்படி

மீன் - 300 கிராம், உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு,
இஞ்சி - 80 கிராம்,
கடுகு எண்ணெய் - 100 மி.லி.,
நிஜெல்லா - ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 2,
சுடு தண்ணீர் - 300 மி.லி.,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2, 
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி சாறு எடுக்கவும். கடாயில் கடுகு எண்ணெயை காயவைத்து மீன் துண்டுகளை போட்டு பாதி வேக்காடு வறுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாய், நிஜெல்லா சேர்த்து வதக்கவும் காய்ந்த மிளகாய் நிறம் மாறும்போது இஞ்சிச்சாறு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுடு தண்ணீர், உப்பு சேர்க்கவும். மசாலா கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த மீன் துண்டுகளை போட்டு மூடி வைத்து, அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். மீன் வெந்ததும் கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாயை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget