திருமணத்தை நினைத்தால் பயம் சுவாதி

சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள
மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார். தற்போது யட்சன் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகைகளில் கிசுகிசுவில் சிக்காதவர் சுவாதி. ஏன் என்று அவரே கூறுகிறார் "நான் ரொம்ப சிம்பிளான பொண்ணு, எல்லா பொண்ணுங்களும் வேலைக்கு போற மாதிரி நான் சினிமாவுல நடிக்கப்போறேன். ஷூட்டிங் முடிஞ்சா சாதாரணமா நடந்து வீட்டுக்கு போகணும்னு விரும்புறேன். பெரிய நடிகைன்னு தலையில எதையும் ஏத்தி வச்சிக்கிறதில்ல. நான் உண்டு என் வேலை உண்டு அவ்வளவுதான். தேடி வர்ற படங்கள்ல மட்டும் நடிக்கிறேன். எந்த வாய்ப்பையும் தேடிப்போறதில்ல.

எனக்கு தேவை நல்ல படம், நல்ல வேடம். பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அப்படி ஆசையிருந்தால் அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். அதற்கு நான் தயாராக இல்லை. 5 வருடமோ பத்து வருடமோ சினிமாவுல நடிக்கப்போறேன். அதுவரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போலாமே ஏன் டென்ஷனோட வாழணும். மீடியாக்கள் காதல், கல்யாணம் பற்றி கேக்குறப்போதான் பயம் வருது. அண்ணா விட்டுருங்கண்ணான்னு கும்பிடுவேன். ஏன்னா திருமணம்னா எனக்கு அப்படியொரு பயம் என்கிறார் ஸ்வாதி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget