தேவையானவை
- 1/4 கிலோ நறுக்கிய கேரட்.பீன்ஸ்,அவரைகாய்,புடலங்காய் சேர்ந்த கலவை
- 1/2 டீஸ்பூன் கடுகு ,சீரகம் ,தனியா
- 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 3 வர மிளகாய்,பச்சை மிளகாய்
- 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
- தேவையான அளவு உப்பு ,எண்ணெய்
செய்முறை
காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும்.தனியா ,வர மிளகாய் ,பச்சை மிளகாய் ,தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.வெந்த காய்கறியில் அரைத்த விழுதை கொட்டி,நன்றாக கொதித்ததும்,சிறிது எண்ணெயில் கடுகு ,சீரகம் ,இஞ்சி தாளித்து கொட்டி இறக்கவும்.

கருத்துரையிடுக