முதலில் முகத்திற்கு கிளன்சிங் பிறகு மசாஜ், ஸ்கிரப், பேக் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். கிளன்சிங் செய்ய பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி
மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். மசாஜ் செய்ய தயிரை உபயோகப்படுத்த வேண்டும்.
இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக் கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும். தேனை பயன்படுத்தியும் மசாஜ் செய்யவேண்டும். பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண சருமத்தினர் மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம். தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக் கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன் இருக்கும்.