கால்களில் பாளம் பாளமாக வெடிக்கிறதா

கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்... வெள்ளை ரவை... அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். 

இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சை சாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு, பாதத்தைத் துடைத்து விட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள். 

நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். காலும் மெத்தென்று இருக்கும். சிலரது உதடுகள் கறுப்பு லிப்ஸ்டிக் போட்டது போல இருக்கும். 

அவர்களுக்கு ரோஜா இதழ்களை வாக்களிக்கிறது உளுத்தம் பருப்பு. வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவி 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். 

இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுகள். நாளடைவில், உதடுகள் ரோஜா நிறமாவதுடன், மென்மையாகவும் ஆகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget