முந்தானை முடிச்சு நாயகியாகும் தேவி கிருபா

தென்றல், உறவுகள் சங்கமம் தொடர்களில் நடித்து வந்த தேவி கிருபா, தற்போது முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முந்தைய சீரியல்களில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தேன். வயதை மீறிய தோற்றத்துடன் நடித்தேன். முந்தானை முடிச்சில் மார்டன் டிரஸ் அணியும் பெண்ணாக நடிப்பதால் சந்தோஷமாக இருக்கிறது. காரணம் நான் நிஜத்தில் மார்டன் உடைகளை விரும்பி அணிகிறவள்.



தொடர்களில் நடிப்பதோடு நிகழ்ச்சி தொகுப்பாளினி வாய்ப்புகளும் நிறைய வருகிறது. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த பணியை செய்யலாம் என்று நினைக்கிறேன். நடிக்கும்போது தவறு செய்தால் ரீடேக் போகலாம். தொகுப்பாளினியாக அப்படி செய்யும் வாய்ப்பு குறைவு. அதனால் நன்றாக பயிற்சி எடுத்த பிறகு தொகுப்பாளினியாவேன். என்கிறார் தேவி கிருபா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget