கவர்ச்சிக்கு கமிட்டாகும் ப்ரியாஆனந்த்

செகண்ட் இன்னிங்சில் ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்துள்ள அஞ்சலி, அடுத்து விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் படத்தில்
இணைந்திருக்கிறார். இதையடுத்தும் சில படங்களில் நடிப்பதற்கான தீவிர பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறார். அதனால், தனது சென்னை முகாமை ஐதராபாத்துக்கு இடம்பெயர்த்திருந்த அஞ்சலி தற்போது சென்னையிலேயே டேரா போட்டிருக்கிறார்.

தன்னை வைத்து படம் பண்ணியவர்கள், பண்ணாதவர்கள் என்று அனைவருடனும் தான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நேரடி விசிட் அடித்து நட்பை புதுப்பித்து வரும் அஞ்சலி, புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையும் நடத்துகிறார். அதோடு, சேட்டை படத்தில் நடித்து வந்தபோது சம்பள விசயத்தில் எகிறி நின்ற, அஞ்சலி இப்போது ரொம்பவே இறங்கி நிற்கிறாராம்.

இதனால் ப்ரியாஆனந்த் கமிட்டாகியிருந்த ஒரு படம்கூட தற்போது அஞ்சலி பக்கம் திரும்பி நிற்கிறது. அந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிப்பதாக சொல்கிறார்கள். கதை கேட்டு ஓ.கே செய்து விட்ட ப்ரியா ஆனந்த் இன்னும் சைன் போட்டு அட்வான்ஸ் வாங்க வேண்டியது மட்டும்தான் பாக்கியாம். அதற்குள அஞ்சலி அந்த வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதால், ஆடிப்போயிருக்கும் ப்ரியாஆனந்த், இதன்பிறகும் கவர்ச்சி விசயத்தில் கட்டுப்பாடு விதித்தால் மார்க்கெட் காலியாகி விடும் என்பதால், சில டைரக்டர்களிடம் தாமாக முன்வந்து அதிரடி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டத் தொடங்கியிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget