அமீருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்

மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். தற்போது அவர் ஜாஸ்பா என்ற
படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், இதுவரை கரண் ஜோகரின் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்ததேயில்லை. ஆனால், இப்போது கரண் ஜோகர் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமீர்கானையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் கரண் ஜோகர் பேசி வருவதாக கூறப்படுகிறது. அமீர்கானும், ஐஸ்வர்யா ராயும் இதுவரை ஹீரோ-ஹீரோயினாக இணைந்து நடிக்கவில்லை.('மேலா' படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அமீர்கானும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்தனர்) அதனால் இந்தப்படத்தில் நிச்சயம் இவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget